Ahmedabad Plane Crash: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் AI171 நேற்று மதியம் 1:38 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 230 பயணிகள், 10 பயணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசி பிறகு விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார் !